ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மலையாள சினிமாவில் இரட்டை கதாசிரியர்கள் அதிகம் இருக்கின்றனர். ஒருகட்டத்தில் இணைந்தோ அல்லது தனித்தனியாகவோ இயக்குனர்களாகவும் மாறுகின்றனர். அந்தவகையில் பிருத்விராஜ் நடித்த அமர் அக்பர் அந்தோணி' மற்றும் கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன் ஆகிய சூப்பர் ஹிட் படங்களுக்கு கதை எழுதிய விஷ்ணு உன்னிகிருஷ்ணன்-பிபின் ஜார்ஜ் இருவரும் இப்போது இணைந்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளனர். இதில் ஜெயராமும் துல்கர் சல்மானும் இரண்டு நாயகர்களாக இணைந்து காமெடியில் கலக்கவுள்ளனர். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவான இவர்களது முந்தைய கதைகளைப் போல இந்தப்படமும் காமெடி களைகட்டும் விதமாக இருக்குமாம்.