ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பிரபல நடிகர்கள் நடித்த படங்கள் ஒரே நாளில் வெளியானால் படங்களின் வசூல் பாதிக்கும் என்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து படங்களை ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஆனால், தெலுங்கு சினிமாவில் அல்லு அர்ஜூன் நடித்துள்ள நா பேரு சூர்யா படமும், கொரட்டல்ல சிவா இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள பாரத் அனே நேனு என்ற இரண்டு படங்களும் 2018-ம் ஆண்டு ஏப்ரல் 27-ந்தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சிலர் அல்லு அர்ஜூனை அணுகி, ஒரே நாளில் இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியானால் வசூல் பாதிக்கும் என்று அவர் நடித்த படத்தை வேறு தேதியில் ரிலீஸ் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்களாம். ஆனால் அதற்கு, நா பேரு சூர்யா படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் 27-ந் தேதி வெளியிடுவதாக முதலில் நாங்கள் தான் அறிவித்தோம். ஆனால் இப்போது திடீரென்று மகேஷ்பாபு படக்குழுவினர் அதே தேதியை அறிவித்துள்ளனர்.
மேலும், அவர்கள் அறிவித்ததை அடுத்து நாங்கள் பின்வாங்கினால் அந்த படத்தைப்பார்த்து பயந்து விட்டது போலாகி விடும். அதனால் திட்டமிட்டபடி அதேநாளில் நான் நடித்த, நா பேரு சூர்யா படமும் திரைக்கு வரும் என்று உறுதிபட கூறிவிட்டாராம் அல்லுஅர்ஜூன்.