ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மலையாள சினிமாவில் நடிகர் பசுபதிக்கென தானது படங்களில் முக்கியமான ஒரு கேரக்டரை ஒதுக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார் இயக்குனர் எம்.ஏ.நிஷாத்.. பெரும்பாலும் தமிழ்-மலையாளம் இணைந்த படங்களையும் உருவாக்குவதில் அதிகம் ஆர்வம் காட்டும் இவர், பசுபதியை வைத்து இதற்கு முன் நம்பர் 66 மதுரா பஸ் மற்றும் வைரம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் 'கிணர்' (கிணறு) என்கிற படத்தை இயக்கி வருகிறார். முந்தைய படங்களைப்போல இந்தப்படத்திலும் பசுபதியை முக்கிய கேரக்டரில் நடிக்க வைத்துள்ளார் எம்.ஏ.நிஷாத்..
அதுமட்டுமல்ல, ஜெயப்ரதா, அர்ச்சனா, ரேவதி என மூன்று சீனியர் நடிகைகள் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். குடிதண்ணீர் பிரச்சனையை மையமாக கொண்டு இருமொழிகளில் உருவாக்கப்பட்டு வரும் இந்தப்படம் தமிழில் 'கேணி' என்கிற பெயரிலும் வெளியாக இருக்கிறது. 1991ல் தளபதி படத்தில் இளையராஜா இசையில் சூப்பர்ஹிட்டான 'காட்டுக்குயிலு' பாடலை தொடர்ந்து 26 வருடங்கள் கழித்து யேசுதாசையும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தையும் ஒன்றாக இணைத்து இதில் ஒரு பாடலை பாடவைத்துள்ளார் எம்.ஏ.நிஷாத்.