ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தீபாவளிக்கு தமிழில் வெளியான விஜய்யின் மெர்சல் படம், அதிரின்டி என்ற பெயரில் அக்டோபர் 26-ந்தேதி தெலுங்கில் வெளியாகிறது. மெர்சல் படத்தின் இந்த தெலுங்கு பதிப்பிற்கு இதுவரை பெரிய எதிர்ப்புகள் இல்லாமல்தான் இருந்து வந்தது. ஆனால், மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா குறித்த காட்சி, வசனங்கள் ஏற்படுத்தியுள்ள பரபரப்பு காரணமாக ஆந்திராவில் இப்போதே அதிரின்டிக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதன் காரணமாக, ஏற்கனவே முடிவு செய்திருந்ததை விடவும் தற்போது தெலுங்கில் அதிகப்படியான தியேட்டர்களில் அதிரின்டியை வெளியிடவும் தயாராகி வருகிறார்களாம். அந்த அளவுக்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் அதிரின்டி படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி நிற்கிறதாம். ஆனால், தற்போது ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா குறித்த காட்சிகளும், வசனங்களையும் நீக்க வேண்டும் என்கிற எதிர்ப்பு எழுந்திருக்கும் நிலையில், அதிரின்டி படம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய அந்த காட்சிகள் இல்லாமலேயே வெளியாகும் என்று தெரிகிறது.