ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நடிகை வழக்கில் கைதாகி 85 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த நடிகர் திலீப், கடந்த அக்-5ஆம் தேதி நிபந்தனை ஜாமீனில் விடுதலையானார். அதையடுத்து தான் நடித்து பாதியிலேயே நின்ற கம்மார சம்பவம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் திலீப்.
இந்தநிலையில் சிறப்பு புலனாய்வு குழு கூட்டம் இன்று திலீப் வழக்கு குறித்த அடுத்தகட்ட விசாரணைக்காக ஒன்று கூடியுள்ளது. இந்தகூட்டத்தின் முடிவில், திலீப் தற்போதுள்ள 11வது குற்றவாளி என்கிற நிலையில் இருந்து முதன்மை குற்றவாளியாக மாற்றப்படலாம் என்றும் போலீஸ் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. திலீப் வழக்கில் என்ன முடிவுகள் எடுக்கப்பட்டன என்கிற விபரம் இன்று இரவுக்குள் தெரியவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருக்க, இதைப்பற்றி எல்லாம் அலட்டிக்கொள்ளாத திலீப், ஐப்பசி மாதம் நடைதிறக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று காலை சபரிமலைக்கு சென்று சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தார். அப்படியே அருகே இருந்த மாளிகைப்புறத்தம்மன் கோவிலிலும் சாமி தரிசனம் செய்த திலீப், சபரிமலை மேல்சாந்தியையும் சந்தித்து ஆசி பெற்றார்.