ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கொஞ்சம் கூட அடிதடி வன்முறை இல்லாமல் முழுக்க முழுக்க அரசியலை வைத்து, சுவாரஸ்யமான, விறுவிறுப்பான படத்தை தரமுடியும் என நிரூபித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார் மலையாளத்தில் 'ராம்லீலா' படத்தை இயக்கிய அறிமுக இயக்குனர் அருண்கோபி.. இல்லையென்றால் தோமிச்சன் முலக்குப்பாடம் போன்ற, பழம் தின்று கோட்டை போட்ட தயாரிப்பாளர், ஒரு அறிமுக இயக்குனருக்கு படம் தருவது என்றால் சாதாரண விஷயமா..? இல்லை, அந்தப்படத்தை திலீப் ஒப்புக்கொண்டு நடித்தது தான் சாதாரண விஷயமா..?
இந்த இரண்டுபேரின் நம்பிக்கையை மெய்ப்பிக்கும் விதமாக முதல் படத்தையே வெற்றிப்படமாக்கிய அருண்கோபிக்கு அடுத்ததாக மோகன்லால் படத்தை இயக்கும் பம்பர் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிகிறது. ராம்லீலா படத்தின் வெற்றியை தொடர்ந்து மோகன்லாலை சந்தித்து வாழ்த்து பெற்று வந்துள்ளார் அருண்கோபி. கூடவே தயாரிப்பாளர் தோமிச்சனும் உடன் சென்றுவந்துள்ளார். இவர்தானே மோகன்லாலை வைத்து 'புலி முருகன்;' படத்தை தயாரித்தவர். அதனால் தங்களது அடுத்த படத்திற்கு அச்சாரம் போடுவதற்காகத்தான் மோகன்லாலை இவர்கள் சந்தித்துள்ளார்கள் என்றும் சொல்லப்படுகிறது.