‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கடந்த வருடம் மோகன்லால் நடித்த 'புலி முருகன்' படம் வெளியாகி, சூப்பர்ஹிட்டானதுடன் மலையாள சினிமாவின் வியாபார எல்லையை பலமடங்கு விரிவுபடுத்தியது. கடந்த அக்-7ஆம் தேதி வெளியான படத்தின் ஒரு வருட நிறைவு கொண்டாட்டம் மோகன்லால் ரசிகர்களால் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப்படம் மலையாள சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் ஈட்டிய படம் என்கிற பெருமையை தக்க வைத்துக் கொண்டது.
மேலும் மோகன்லால் படத்திற்கு சின்னக் குழந்தைகள் எல்லாம் ரசிகர்களாக மாறிய மாயாஜாலத்தை இந்தப்படம் நிகழ்த்தி காட்டியது 'புலி முருகன்'. புலியின் மேல் மனிதனுக்கு உண்டான தீராப்பகையை மையமாக வைத்து இந்தப்படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் வைசாக். சுமார் 35 கோடியில் தயாரான இந்தப்படம் மொத்தமாக 15௦ கோடிக்கு மேல் வசூலித்து பிரமிப்பை ஏற்படுத்தியது.
பீட்டர் ஹெய்னின் கை வண்ணத்தில் சண்டைக்காட்சிகள், குறிப்பாக மோகன்லால் புலியுடன் மோதும் காட்சிகளும், க்ளைமாக்ஸில் இருபது நிமிட தொடர் சண்டைக்காட்சியும் தியேட்டர்களுக்கு ரசிகர்களை திரும்ப திரும்ப வரவைத்தன. ரஜினிக்கு ஒரு பாட்ஷா போல் மோகன்லாலுக்கு லைப் டைம் ரெக்கார்டாக அமைந்துவிட்டது இந்த 'புலி முருகன்'.