நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'மதராஸி'. இப்படம் இரண்டே நாட்களில் 50 கோடி வசூலைப் பெற்று வெற்றிப் படமாக அமைந்துள்ளது. ரசிகர்களிடமும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
'ஏஸ்' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான கன்னட நடிகை ருக்மிணி வசந்த் நடித்து வெளியான இரண்டாவது படம் 'மதராஸி'. அவர் அறிமுகமான 'ஏஸ்' படம் தோல்வியடைந்த நிலையில், 'மதராஸி' வெற்றி பெற்றது அவருக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
அதற்கு நன்றி தெரிவித்து சமூக வலைத்தளத்தில், “மாலதியாக நடித்தது மிகவும் பலனளிக்கும் மற்றும் மகிழ்ச்சியான பயணமாக இருந்தது. முதல் நாள் படப்பிடிப்பு முதல் இறுதி ஷாட் வரை, இந்த கதாபாத்திரம் எனக்கு ஆராயவும், சிரிக்கவும், கற்றுக்கொள்ளவும், ஒரு புதிய அனுபவத்தை வாழவும் அனுமதித்தது.
இந்த பயணத்தை இவ்வளவு திறமையான நடிகர்கள் மற்றும் அற்புதமான ஆதரவு அளிக்கும் குழுவினருடன் பகிர்ந்து கொண்டதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். இத்தகைய அருமையான மனிதர்களுடன் இணைந்து பணியாற்றியது ஒரு பாக்கியமாகும்.
இப்போது, மதராஸி இறுதியாக உங்கள் அனைவருக்கும் அனுபவிக்க திரையரங்குகளில் வந்துவிட்டது. மாலதியிடமிருந்து (மற்றும் ருக்மிணியிடமிருந்தும்) உங்களுக்கு அன்பும் நன்றியும் அனுப்புகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.