ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'பைசன்', கவுசிக் பெகல்லபதி இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமான 'கிஷ்கிந்தாபுரி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில், கிஷ்கிந்தாபுரி செப்.,12ல் ரிலீசாகிறது. இந்தப் படத்தில் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான டிரைலரில் அனுபமாவை பேய் உருவத்தில் காட்டி இருந்தது பலரை ஆச்சரியப்படுத்தியது.
இந்த நிலையில், ஹாரர் படம் பற்றி அனுபமா கூறுகையில், ‛‛எனக்கு ஹாரர் படங்கள் மிகவும் பிடிக்கும். நான் சின்ன வயதில் இருக்கும்போது ரகசியமாக பேய் படங்களைப் பார்ப்பேன். என் பெற்றோர் தூங்கச் சென்ற பிறகு, ஹாரர் படங்களைப் பார்ப்பேன். அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு இருட்டில் பார்ப்பேன்'' என்றார்.