ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா. இந்த படத்தை அடுத்து தனது தந்தை என்டிஆரின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்கிறார். அந்த படத்தை ராம்கோபால்வர்மா இயக்குகிறார். தனது தந்தையின் கதாபாத்திரம் என்பதால் அந்த படத்தில் நடிக்க ரொம்ப ஆர்வமாகவே இருந்தார் பாலகிருஷ்ணா.
ஆனால் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டீலை ராம்கோபால் வர்மா வெளியிட்டதில் இருந்து டென்சனில் இருக்கிறாராம் பாலகிருஷ்ணா. காரணம், அந்த கதையை என்டிஆரின் கதையாக இல்லாமல் அவரது இரண்டாவது மனைவியான லட்சுமி பார்வதிக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை பண்ணியிருக்கிறாராம் ராம்கோபால்வர்மா.
அதன் காரணமாகத்தான் அந்த படத்திற்கு லட்சுமியின் என்டிஆர் -என்று பெயர் வைத்துள்ளாராம். இப்படி லட்சுமி பார்வதியின் கோணத்தில் கதை செல்வதால், தனது தந்தையின் வாழ்க்கை வரலாறு படமாக இல்லாமல் லட்சுமி பார்வதியின் வாழ்க்கை வரலாறு படமாகி விடும் என்று எரிச்சலில் இருக்கிறாராம் பாலகிருஷ்ணா.