ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மலையாள நடிகர் திலீப்பின் ஜாமீன் மனு நான்காவது முறையாகவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. அவருக்கு இந்தமுறை எப்படியும் ஜாமீன் கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையில், திலீப் நடிப்பில் உருவாகி, கடந்த சில மாதங்களாக ரிலீசாக காத்துக் கொண்டிருக்கும் அவரது 'ராம்லீலா' படத்தை வரும் செப்-28ல் ரிலீஸ் செய்வதாக அறிவித்தார்கள்.
முதலில் தியேட்டர் அதிபர்கள், திலீப் படத்தை ரிலீஸ் செய்வதற்கே மிகுந்த தயக்கம் காட்டியதாகவும், அவர்களை ஒருவாறு அவர்களை சமரசம் செய்தே 'ராம் லீலா'வை ரிலீஸ் பண்ண சம்மதம் வாங்கியுள்ளார் தயாரிப்பாளர் தோமிச்சன்.
தற்போது ஜாமீன் மனு நிரகாரிக்கப்பட்டுள்ள நிலையில், இனி ரிலீஸ் தேதியை மாற்ற தயாரிப்பாளர் விரும்பவில்லை. அதேசமயம் ரசிகர்கள் பலர் இப்போதும் திலீப் மீதான வெறுப்பில் இருந்தால் அவர்கள் மனதையும் கரைக்கும் விதமாக புதிய யுக்தியில் ராம்லீலா படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் நடிகர் திலீப் சிறையில் இருந்து அனுமதிபெற்று தனது தந்தையின் நினைவு நாள் காரியங்களில் கலந்துகொண்ட புகைப்படங்களை வைத்து அந்த போஸ்டரை டிசைன் செய்துள்ளார்கள்.. இது ஓரளவுக்கு ஒர்க் அவுட் ஆகும் என்றே ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். சுமார் 15 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் பிரயாகா மார்ட்டின் கதாநாயகியாக நடிக்க, திலீப்பின் அம்மாவாக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் ராதிகா சரத்குமார்.