ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மலையாளத்தில் 2010ல் பிருத்விராஜுடன் நடித்த 'அன்வர்' படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் இடைவெளி விட்டு 'அச்சயன்ஸ்' என்கிற படத்தில் ஜெயராமுடன் சேர்ந்து நடித்திருந்தார் பிரகாஷ்ராஜ். சில மாதங்களுக்கு முன் வெளியான இந்தப்படம் பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும், அடுத்ததாக மோகன்லாலுடன் 'ஒடியன்' என்கிற படத்தில் இணைந்து நடிக்கும் வாய்ப்பு பிரகாஷ்ராஜை தேடிவந்தது.
விளம்பரப்படங்களை இயக்கிய அனுபவம் வாய்ந்த ஸ்ரீகுமார் மேனன் என்பவர் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். பிளாக் மேஜிக்கை மையமாக கொண்டு உருவாகி வரும் இந்தப்படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
ஏற்கனவே கோழிக்கோட்டிலும், வாரணாசியிலும் இரண்டு கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது பாலக்காட்டில் அடுத்தகட்ட படப்பிடிப்பை துவங்கியுள்ளார்கள். இதில் கலந்து கொண்டு நடித்து வரும் பிரகாஷ்ராஜ், 20 வருடங்களுக்கு முன் மணிரத்னம் இயக்கத்தில், தமிழில் 'இருவர்' படத்தில் மோகன் லாலுடன் நடித்ததை தொடர்ந்து, தற்போது மீண்டும் இணைந்து நடிப்பது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.