விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' |
எல்லா திரையுலகிலும் அறிவுஜீவி என தங்களை நினைத்துக்கொள்ளும் சில இயக்குனர்கள் இருக்கிறார்கள்.. தாங்கள் உருவாக்குவதுதான் கதை, எடுப்பதுதான் படம் என்கிற கொள்கை உடையவர்கள்.. மலையாள இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரியும் அப்படிப்பட்ட ஒருவர் தான். சில நேரம் 'டபுள் பேரல்' போல ரசிகர்களை சோதிக்கும் படங்களை கொடுத்த இவர், 'அங்கமாலி டைரீஸ்' போன்ற, ரசிகர்கள் மட்டுமல்ல, விமர்சகர்களும் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களும் கூட பாராட்டிய படத்தையும் தர தவறியதில்லை.
சில மாதங்களுக்கு முன் இவரது டைரக்சனில் வெளியான 'அங்கமாலி டைரீஸ்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப்படத்தில் புதிய முயற்சியாக, கதாநாயகன்-நாயகி என 84 புதுமுகங்களை வைத்து இயக்கி புதிய சாதனை செய்திருந்தார். இப்போது தனது அடுத்த படமான 'ஈ ம யூ' (ஈஷோ-மரியம்-யூசுப்) என்கிற படத்திலும் இன்னொரு சாதனையை செய்துள்ளார். ஆம்.. ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்தப்படத்தை ஆரம்பித்த லிஜோ ஜோஸ், வெறும் பதினெட்டே நாட்களில் முழுப்படத்தையும் இயக்கி முடித்துள்ளார்.. கடலோர கிராமம் ஒன்றின் பின்னணியில் நிகழும் இந்த கதையில் செம்பான் வினோத், விநாயகன், இயக்குனர் திலீஷ் போத்தன் ஆகியோர் டைட்டில் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.