சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! |
கடந்த மாதம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையே பிருத்விராஜ் நடித்த 'டியான்' என்கிற படம் வெளியானது. சகோதரர்களான பிருத்விராஜும், இந்திரஜித்தும் இணைந்து நடித்திருந்ததும், நடிகரும் கதாசிரியருமான முரளிகோபி இந்தப்படத்தின் கதையை எழுதி இருந்தததுடன் படத்தில் வில்லனாக நடித்திருந்ததும், வட இந்திய மாநிலங்களின் பின்னணியில் இந்தப்படம் உருவாகி இருந்ததும் இந்தப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.. ஆனால் எதிர்பார்ப்பில் பாதியைக்கூட ஈடு செய்யமுடியாமல் படம் தோல்வியை தழுவியது..
இந்தநிலையில் படத்தின் தோல்வி குறித்து மனம் திறந்துள்ள பிருத்விராஜ், “அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து உருவான இந்த கதையை வெகுஜன ரசிகர்களிடம் சரியாக கொண்டு சேர்க்க தவறிவிட்டோம். தவறு ரசிகர்கள் மீதல்ல.. எங்கள் மீதுதான்” என கூறியுள்ளார்.
அதுமட்டுமல்ல, மோகன்லாலை வைத்து தான் இயக்க உள்ள 'லூசிபர்' படத்தின் கதையையும் இதே முரளிகோபி தான் எழுதுகிறார் என்பதால் அதை கமர்ஷியல் அம்சங்கள் மிஸ்ஸாகாதவாறு உருவாக்க வேண்டும் என ஸ்கிரிப்ட்டில் கவனம் செலுத்தி வருகிறாராம் பிருத்விராஜ்.