ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
அரசியல் பிரவேசத்திற்கு பிறகு சிரஞ்சீவி நடித்த படம் கைதி எண் 150. அதையடுத்து பல கதைகளை கேட்டு வந்த அவர், ஆந்திராவைச்சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் கதையை தற்போது ஓகே பண்ணி வைத்திருக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது.
அதனால் படத்தில் இந்திய அளவில் ரசிகர்களுக்கு பரிட்சயமான நடிகர்- நடிகைகள் இருக்க வேண்டும் என்பதற்காக, ஒரு முக்கிய வேடத்தில் அமிதாப்பச்சனை நடிக்க வைக்கிறார் சிரஞ்சீவி. மேலும், ஐஸ்வர்யா ராய், நயன்தாரா இருவரும் கதாநாயகிகளாக நடிக்க, நான் ஈ சுதீப் வில்லனாக நடிக்கிறாராம்.
மேலும், இந்த படத்தின் பிரீ புரொடக்சன்ஸ் வேலைகள் நடந்து வரும் நிலையில், சிரஞ்சீவியின் பிறந்த நாளான ஆகஸ்ட் 22-ந்தேதி அன்று படத்தின் தலைப்புடன் கூடிய லோகோ வெளியாக இருப்பதாக படத்தின் டைரக்டர் சுரேந்தர் ரெட்டி அறிவித்துள்ளார். இந்த படத்தை சிரஞ்சீவியின் மகனான நடிகர் ராம்சரண் தயாரிக்கிறார்.