ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மலையாளம், தமிழை தொடர்ந்து, தற்போது நேரடி தெலுங்கு படமாக உருவாகும் 'மகாநதி' மூலம் தெலுங்கிலும் அடியெடுத்து வைத்துள்ளார் துல்கர் சல்மான். இந்தநிலையில் பாலிவுட்டில் முதன்முதலாக அடியெடுத்து வைக்கும் வாய்ப்பும் அவரை தேடி வந்துள்ளது. தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டான ஆகர்ஷ் குரானா என்பவர் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். தவிர இந்தப்படத்தில் இர்பான் கான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
ஆரம்பத்தில் துல்கருக்கு பதிலாக அபிஷேக் பச்சன் தான் இந்த கேரக்டரில் நடிப்பதாக இருந்ததாம்.. ஆனால் அபிஷேக்கின் தேதிகள் ஒத்து வராததால், துல்கர் சல்மான் இந்தப்படத்திற்குள் இழுக்கப்பட்டுள்ளார்.. இந்த வாய்ப்பு துல்கரை தேடிவர அவர் நடித்த சார்லி படம் தான் காரணமாம்.
மணிரத்னம் படம் என்பதால் 'ஒ காதல் கண்மணி' படத்தை பார்த்த இயக்குனர் ஆகர்ஷ் குரானா, அதில் துல்கரின் நடிப்பு தன்னை ஈர்க்கவே தொடர்ந்து அவர் நடித்த படங்களை பார்க்க ஆரம்பித்தாராம். 'சார்லி' படத்தில் துல்கரின் மிகச்சிறப்பான நடிப்பை பார்த்தபோது தனது படத்திற்கு இவர் தான் செட்டாவார் என முடிவு செய்தாராம்.