மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கேரள நடிகை கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைக்கு ஆளான வழக்கில் முக்கிய குற்றவாளியாக செயல்பட்டவன் தான் ட்ரைவர் பல்சர் சுனில்.. இவனுக்கு பணம் கொடுத்து இந்த வேலையை செய்ய சொன்னது நடிகர் திலீப் தான் என்கிற புகாரின் பேரில் இப்போது பல்சர் சுனிலும் திலீப்பும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.. பல்சர் சுனிலிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், தான் திலீப்பின் மனைவி காவ்யா மாதவனிடம் 2 மாதம் ட்ரைவராக வேலை பார்த்ததாக கூறி இருந்தான்..
சில தினங்களுக்கு முன் காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்திய போலீஸார், பல்சர் சுனில் கூறியது பற்றி விசாரிக்கையில், தனக்கு பல்சர் சுனில் யாரென்றே தெரியாது என்றும், அந்த நபர் சொல்வது பொய் என்றும் திட்டவட்டமாக மறுத்துள்ளார் காவ்யா மாதவன். ஆனால் போலீஸார் காவ்யா மாதவனிடம் பல்சர் சுனில் வேலை செய்தானா, காவ்யா மாதவன் சொல்வது உண்மையா என்பதை உறுதிப்படுத்த காவ்யா மாதவனின் நண்பர்கள் வட்டாரத்திலும், அவரது அக்கம் பக்கத்தினரிடமும் விசாரணை மேற்கொள்ள இருக்கின்றனராம்.