ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கடந்த சில நாட்களாக ஆந்திராவில், குறிப்பாக தெலுங்கு திரையுலகில் சுழன்றடிக்கும் போதைப்பொருள் மாபியா குறித்து தெலுங்கு திரையுலக பிரபலங்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று நடிகர் ரவி தேஜாவிடமும் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் தனக்கும் போதை கும்பலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று கூறிய ரவி தேஜா, சமீபத்தில் தான் தனது தம்பியை விபத்தில் பறிகொடுத்து சோகத்தில் இருக்கும் எனக்கு இந்த போதைப்பொருள் விவகாரத்தில் பங்கு இருப்பதாக சொல்லப்படுவது வேதனையளிக்கிறது என கூறினாராம்.
ரவி தேஜாவின் மேக்கப்மேன், உதவியாளர், நீண்டகால நண்பர் என பல முகங்கள் கொண்ட பி.ஏ.ராஜூவிடமும் அதிகாரிகள் விசராணை நடத்தினார்கள். அதில் ராஜூ இதற்கு முன் கணக்கில் காட்டிய தனது வருமானத்தை சுட்டிக்காட்டிய அதிகாரிகள், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் மூன்று வீடுகளை வாங்கும் அளவுக்கு உங்களுக்கு பணம் எப்படி வந்தது..? நீங்கள் ரவிதேஜாவின் பினாமியாக செயல்படுகிறீர்களா என துருவித்துருவி கேள்வி கேட்க பதில் சொல்ல முடியாமல் திணறினாராம் ராஜூ.
போலீஸாரை பொறுத்தவரை ரவிதேஜாவின் நடவடிக்கைகளை எல்லாம் சாவி கொடுத்தாற்போல் செயல்பட்ட வைப்பது எல்லாம் இந்த ராஜூ தான் என்பதால், இந்த போதைப்பொருள் விவகாரத்தில் கூட ரவிதேஜாவை விட, ராஜூவிடம் தான் உண்மைகளை கறக்கவேண்டி இருக்கும் என்று உறுதியாக நம்புகிறார்களாம்.