ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நடிகை கடத்தல் விவகாரத்தை இந்த அளவுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டி, பூதாகரமாக்கியத்தில் கேரள மீடியாக்களும் நிறைய பங்கு உண்டு.. ஆனால் மீடியாக்களின் இந்த அதிரடியை மலையாள நடிகர் சங்கம் ரசிக்கவில்லை என்றே தெரிகிறது.. குறிப்பாக திலீப் பக்கம் தவறு இல்லாதது போல கருத்து கோரிய நடிகர்சங்க தலைவர் இன்னொசன்ட்டை அதிரடி கேள்விகளால் தடுமாற வைத்தன மீடியாக்கள்.. இதனால் நடிகர்சங்கத்தில் புதிய ஒரு முடிவை எடுத்துள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது..
அதாவது நடிகர்சங்கத்தை சேர்ந்த யாரும் வரும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு டிவி சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவோ, பத்திரிகைகளில் சிறப்பு பேட்டி அழிக்கவோ கூடாது என்பதுதான் அந்த முடிவாம்.. ஆனால் நடிகர் பிருத்விராஜுக்கு சங்கத்தின் இந்த முடிவில் உடன்பாடு இல்லையாம்.. ஆரம்பத்தில் இருந்தே மீடியாக்கள் மீது தனி பாசம் வைத்துள்ள பிருத்விராஜ், இந்த முடிவை மீற தயாராகிவிட்டாராம். நடிகர்சங்கம் இப்படி ஒருவு முடிவெடுத்திருப்பது உண்மை என்றால் வரும் ஓணம் சீசனில் அனைத்து சேனல்களிலும் பிருத்விராஜின் நிகழ்ச்சிகளாக மட்டுமே பார்க்கமுடியும் என்றும் திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.. இனி அது என்ன புதிதாக குட்டையை குழப்ப போகிறதோ தெரியவில்லை.