ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.. ஜூனியர் என்.டி.ஆர் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.. இதில் பங்கு பெற்றுள்ள போட்டியாளர்களின் செயல்கள் அவ்வளவாக பரபரப்பை உண்டாக்கவில்லை.. அதற்கேற்ற மாதிரி ஜூனியர் என்.டி.ஆர் தோன்றும் அந்த இரண்டு நாட்களில் அவர் பேசுவது கொஞ்சம் செயற்கையாகவே இருந்ததும் பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை.. நிகழ்ச்சி தொய்வடைவதை உணர்ந்த ஜூனியர் என்.டி.ஆர் எங்கே சொதப்புகிறது என்பதை ஆராய்ந்தார்..
பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் நடக்கும் அனைத்தையும் பார்த்து அதில் சில முக்கியமான நிகழ்வுகளை ஜூனியர் என்.டி.ஆரின் கவனத்துக்கு கொண்டு போவதுடன், போட்டியாளர்களுடன் அவர் எப்படி பேசவேண்டும் என்பதை வசனமாகவும் பஞ்ச்களாகவும் வசனகர்த்தா ஒருவர் எழுதிகொடுத்து வந்தாராம். அதில் தான் சொதப்புகிறது என்பதை கண்டுபிடித்தாராம் ஜூனியர் என்.டி.ஆர். அதன்பின் அவரை வசனம் எழுதும் வேலையை நிறுத்த சொல்லிவிட்டு நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள போட்டியாளர்களின் விபரங்களை மட்டும் வாங்கிக்கொண்டு தானே அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக பஞ்ச் வசனங்களை தயார்செய்ய ஆரம்பித்தார்.. இதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்ததுடன், சனி, ஞாயிறுகளில் ஜூனியர் என்.டி.ஆரின் பேச்சை கேட்பதற்காகவே பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளதாம்.