ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பிரபல மலையாள நடிகை மைதிலி. 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். பல படங்களில் பாடியுள்ளார். சால்ட் அண்ட் பெப்பர், மற்றும் ஈ அடுத்த கலத்து ஆகிய படங்களில் நடித்ததற்காகக பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். மைதிலி சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சினிமா தயாரிப்பு நிர்வாகியான கிரண் குமார் என்பவரை காதலித்து வந்தார். பின்னர்தான் அவருக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்ட விபரம் தெரிந்தது. இதனால் மைதிலி கிரண் குமாரை பிரிந்து விட்டார்.
இதனை கிரண்குமாரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மைதிலியை பலவாறு டார்ச்சர் செய்து வந்திருக்கிறார். நீயும் நானும் நெருக்கமாக இருக்கும் படங்களை வெளியிடுவேன் என்று மிரட்டியும் வந்துள்ளார். ஆனால் இதனை மைதிலி பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த நிலையில் கிரண்குமார் மைதிலியுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மைதிலி, கிரண்குமார் மீது எர்ணாகுளம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் கிரண்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.