ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கிய அனாமிகா படத்தில் நடித்தபோது அந்த படத்தில் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் நயன்தாரா பங்கேற்கவில்லை. அதனால் அவர் மீது தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார். அதையடுத்து நயன்தாராவுக்கு தெலுங்கு படங்களில் ஓராண்டு ரெட் கார்டு போடப் பட்டது. அதன் பின்னர் தமிழ், மலையாளப் படங்களில் மட்டுமே நடித்து வந்த நயன்தாரா, தற்போது மீண்டும் தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.
இந்த நிலையில், மலையாளத்தில் மம்மூட்டியுடன் இணைந்து அவர் நடித்த புதிய நியமம் என்ற படம் தற்போது தெலுங்கில் வாசுகி என்ற பெயரில் ரிமேக்காகி வருகிறது. இந்த படம் போதைக்கு அடிமையான ஒரு பெண்ணை சிலர் பலாத்காரம் செய்து விடுவதும், பின்னர் அவர்களை அந்த பெண் பழிவாங்குவது போன்ற கதையில் உருவாகியிருக்கிறது.
தற்போது தெலுங்கு சினிமாத்துறையில் போதை பொருள் விவகாரம் சூடுபிடித்திருப்பதால், நயன்தாராவின் வாசுகி பட வட்டாரம் பரபரப்படைந்திருக்கிறது. அதோடு தற்போதைய சூழலுக்கேற்ப கதையில் சில திருத்தங்களையும் செய்து தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடத்தி வருகிறார்களாம்.