ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தெலுங்கத் திரையுலகில் சில நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் இடையே சமீப காலமாக போதைப் பொருளைப் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருவதாக கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த விவகாரத்தில் சிக்கிய திரைப் பிரபலங்கள் சிலரை விசாரணைக்கு வருமாறு சிறப்பு விசாரணைக் குழுவினர் அழைத்தனர்.
இயக்குனர் பூரி ஜெகன்னாத், நடிகர் சுப்பராஜ், ஒளிப்பதிவாளர் ஷாம் கே நாயுடு ஆகியோர் விசாரணைக்குச் சென்று வந்தனர். அவர்களிடமிருந்து சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், சில நடிகர், நடிகைகள் அடுத்தடுத்த நாட்களில் விசாரணைக்குச் செல்ல உள்ளார்கள். அவர்களில் தற்போது 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் முமைத் கானும் ஒருவர். வரும் 27ம் தேதி அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி அவர் விசாரணையில் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது.
விசாரணைக் குழுவினர் தங்களது விசாரணையை மிகவும் இறுக்கியுள்ளதால் சில திரைப் பிரபலங்கள் கைது செய்யப்படலாம் என்றும் டோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகிறார்கள்.