ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தொடர்ந்து மாறிவரும் பருவநிலையையும், புவி வெப்பமயமாதலையும் கணக்கில் கொண்டு கேரளா முழுவதும் சுமார் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் வேலையை ஆரம்பித்துள்ளது கேரள அரசு. மேலும் இந்த திட்டத்தை மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக இதனை துவங்கி வைக்கும்படி மலையாள ஸ்டார் மோகன்லாலை கேட்டுக்கொண்டது. எப்போதும் மக்களுக்கு பயன்தரும் அரசின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் மோகன்லாலும் இதற்கு ஒப்புகொண்டார்.
தற்போது இயக்குனர் லால் ஜோஸ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துவரும் 'வெளிப்பாடிண்டே புத்தகம்' படத்தில் கல்லூரி துணை முதல்வராக நடிக்கிறார் மோகன்லால். இதன் படப்பிடிப்பு கேரளாவில் தும்பாவில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் தான் நடைபெற்று வருகிறது.. கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி முழுவதும் நிறைய மரக்கன்றுகளை நட்டுவைத்து இதன் படப்பிடிப்பை துவங்கினார்கள்.. அதன் தொடர்ச்சியாக இப்போது நாடும் முழுதும் மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும் அதே கல்லூரியில் மரக்கன்றுகளை நட்டு துவங்கி வைத்துள்ளார் மோகன்லால்.