'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் |
அதிக படங்களை இயக்கியவர் என்கிற உலக சாதனைக்கு சொந்தமான பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் தாசரி நாராயணராவ் நேற்று முன்தினம் காலமானார். நேற்று மாலை அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.. நேற்று தாசரி நாராயணராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அவரது மருமகள் சுசீலா தனது மாமானாரின் சாவில் சந்தேகம் உள்ளதாக தான் கருதுவதாக மீடியாக்களிடம் பகீர் செய்தியை கூறினார். தாசரி நாராயணராவின் மகன் ஹரி பிரபுவின் மனைவி தான் இந்த சுசீலா.
சில கருத்து வேறுபாடுகளால் தனது கணவரை பிரிந்து தனது மகனுடன் தனியாக வசிக்கிறார் சுசீலா. இருந்தாலும் முறைப்படி விவாகரத்து எதுவும் பெறவில்லை.. அவ்வப்போது தனது மாமனாரை சந்தித்து நலம் விசாரித்து செல்வாராம் சுசீலா.. அப்போதெல்லாம் கவலைப்படாதே உன் பையனை நானே ஹீரோவக்குகிறேன் என்று சொல்லியிருந்தாராம் தாசரி நாராயணராவ்.
அதுமட்டுமல்ல சில நாட்களுக்கு முன் தாசரியை சந்தித்தபோது கூட, அவர் நன்றாகத்தான் இருந்ததாகவும் மருத்துவமனை சிகிச்சை முடிந்துவந்தபின் தனது சொத்தை முறைப்படி பிரித்து அதில் ஒரு பங்கை கொடுத்து சுசீலாவுக்கும் அவரது மகனுக்கும் எதிர்காலத்திற்கு பயன்படும் விதமான ஏற்பாடுகளையும் செய்வதாக கூறியிருந்தாராம். இந்தநிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றவர் திடீரென இறந்தது தனக்கு பலத்த அதிர்ச்சியையும் கூடவே சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது என கொளுத்திப்போட்டுள்ளார் சுசீலா.