விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
மோகன்லால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'வில்லன்'. பி.உன்னிகிருஷ்ணன் இயக்கிவரும் இந்தப்படத்தில் விஷால், ஹன்ஷிகா, மஞ்சு வாரியர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் முன்னாள் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்தப்படத்தில் மிக முக்கியமான காட்சி ஒன்றை படமாக்கும்போது மோகன்லால் சொன்ன ஒரு திருத்தத்தை கேட்டு இயக்குனர் உன்னி கிருஷ்ணன் உடனே ஒகே சொன்னாராம்.
அதாவது மோகன்லாலும், நடிகர் சித்திக்கும் இணைந்து நடிக்கும் காட்சி படமாக்கப்பட்டபோது சித்திக் நீளமாக வசனம் பேச, பேசி முடிந்தபின் மோகன்லால் அவரை நோக்கி ஒரு லுக் விட வேண்டும் என இயக்குனர் கூறியுள்ளார். ஆனால் மோகன்லாலோ அந்த இடத்தில் சித்திக்கை நோக்கி பார்ப்பதற்கு பதிலாக, பார்வையை தரையை நோக்கி பார்ப்பதாக வைத்தால் அந்த காட்சிக்கு பொருத்தமானதாக இருக்கும் என்று சொல்ல, எந்த மறுபேச்சும் பேசாமல் மோகன்லால் சொன்னபடியே அந்த காட்சியை படமாக்கி விட்டார் உன்னிகிருஷ்ணன்.
பின்னர் படத்தின் எடிட்டர் சமீர் முகமது படத்தொகுப்பு பணிகளை செய்து வரும்போது, மேற்குறிப்பிட்ட காட்சியை எடிட் பண்ணும்போது மோகன்லாலின் அந்த லுக்கை கண்டு அசந்துவிட்டாராம். அதன்பின் அங்கே வந்த இயக்குனரிடம் அந்தக்காட்சியை சுட்டிக்காட்டி, மோகன்லாலின் அந்த லுக் தான் அந்த காட்சியின் ஹைலைட் என்றும் அவர் சித்திக்கை பார்க்கும் விதமாக அந்த லுக்கை படமாக்கியிருந்தால் அவ்வளவு சிறப்பாக இருந்திருக்காது என்றும் தனக்கு தோன்றியதை கூறியிருக்கிறார். ஷூட்டிங்ஸ்பாட்டில் நடந்த விஷயம் எடிட்டருக்கு தெரியாது. ஆனால் மோகன்லால் நன்றாக வரும் என கணித்த காட்சி, அது பற்றி எதுவும் அறிந்திராத எடிட்டரையே பேசவைத்து விட்டதே என ஆச்சர்யப்பட்டு போனாராம் இயக்குனர் உன்னிகிருஷ்ணன்.