ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கிட்டத்தட்ட 21 வருட கனவு இன்றுதான் நனவாகி இருக்கிறது மலையாள இயக்குனர் லால் ஜோசிற்கு.. ஆம்.. 1998ல் மம்முட்டி நடித்த ஒரு மருவத்தூர் கனவு' படத்தை இயக்கியபின் அடுத்தது எப்போது மோகன்லால் படத்தை இயக்கப்போகிறார் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருந்தது.. இத்தனைக்கும் லால்ஜோசின் குருவான இயக்குனர் கமல் இயக்கிய 'விஷ்ணுலோகம்' படத்தில் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றிய லால்ஜோசை பார்த்து இவர் மிகப்பெரிய இயக்குனராக வருவார் என ஆருடம் சொன்னவர்தான் மோகன்லால்.. சொன்னபடியே பெரிய ஆளாக வளர்ந்தும் விட்டார் லால் ஜோஸ்.
ஆனால் ஏனோ தெரியவில்லை இத்தனை நாட்களாக இந்த கூட்டணி ஏனோ சில காரணங்களால் ஒன்று சேரவே முடியாமல் போனது. தற்போது இருவருக்கும் இடையேயான பனித்திரை விலகி, இதோ மோகன்லால் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை இன்று துவக்கியும் விட்டார் லால் ஜோஸ். கேரளாவில் தும்பாவில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் தான் படப்பிடிப்பு நடைபெறுகிறது.. இதன் துவக்க நாளான இன்று கல்லூரி முழுவதும் நிறைய மரக்கன்றுகளை நட்டுவைத்து படப்பிடிப்பை துவங்கியுள்ளனர். இந்தப்படத்தில் மோகன்லால் கல்லூரி ஒன்றின் வைஸ்பிரின்சிபாலாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.