விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
முதல் படத்திலேயே ஓஹோவென புகழின் உச்சிக்கு ஏறிவிட்ட நடிகைகள் பலரை நாம் பார்த்திருக்கிறோம்.. ஆனால் இன்று புகழின் உச்சியில் இருக்கும் சில முன்னணி நடிகைகள் சின்னச்சின்ன வேடங்களில் நடித்து முதலிடத்திற்கு வந்துள்ளார்கள்.. இன்னும் சிலர் நீயெல்லாம் தேறவே மாட்டே என ஒரு காலத்தில் புறக்கணிக்கப்பட்டு பின் தங்களது திறமையால் தங்களை நிராகரித்தவர்களே வெட்கி தலைகுனியும்படி நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் நிகழ்வுகளும் சில உண்டு.
நடிகை அனுஷ்காவும் அப்படி ஆரம்பத்திலேயே நிரகாரிகப்பட்ட ஒருவர் தான்.. ஆனால் இன்று ஆயிரம் கோடி வசூலை அள்ளிய படத்தின் கதாநாயகி அவர். இப்போது அவரது பழைய ஆடிஷன் போட்டோக்கள் இணையதளத்தில் வெளியாகி இந்த உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது. பெங்களூரில் படித்து முடித்தபின் சினிமாவில் நுழையலாம் என்கிற எண்ணத்துடன் கன்னடப் படம் ஒன்றின் ஆடிசனில் கலந்துகொள்ள சென்றாராம் அனுஷ்கா. ஆனால் ஆடிசனில் அவர் நிராகரிக்கப்பட்டார்.
அதன்பின் 2005ல் 'பவர்' படம் மூலமாக தெலுங்கு திரையுலகில் நுழைந்தார். அடுத்தவருடமே அவரது திறமை கண்டு தமிழுக்கு 'ரெண்டு' படம் மூலம் அழைத்துவந்தார் சுந்தர்.சி.. அதன்பின்னும் கூட நம்மவர்களே அனுஷ்காவை கண்டுகொள்ளவில்லை. பின் தெலுங்கிற்கு சென்று முன்னணி நடிகர்களுக்கெல்லாம் ஜோடியாக நடித்த பின் தான், நம்மவர்களுக்கு ஞானோதயம் வந்து 'வேட்டைக்காரன்' படத்தின் மூலம் மீண்டும் தமிழிற்கு அவரை அழைத்து வந்தனர். அனுஷ்கா இங்கே பிரபலமாகாத போதே, 2006ல் இதே ராஜமௌலியின் டைரக்சனில் தெலுங்கில் 'விக்ரமார்குடு' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.