ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான 'கசபா' என்கிற படத்தில் நடித்ததன் மூலம் மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைத்தார் வரலட்சுமி சரத்குமார். அதை தொடர்ந்து சமுத்திரக்கனி மலையாளத்தில் இயக்கும் 'அப்பா' ரீமேக்கான 'ஆகாச மிட்டாயி' படத்தில் நடிக்க ஒப்பந்தமானவர், தயாரிப்பாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்தப்படத்தில் இருந்து விலகினார்.. ஆனால் விலகியதும் ஒருவகையில் நல்லதற்குத்தான் என்பது போல மீண்டும் மம்முட்டி நடிக்கும் புதிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு வரலட்சுமியை தேடி வந்தது..
மம்முட்டியை வைத்து 'ராஜாதி ராஜா' படத்தை இயக்கிய அஜய் வாசுதேவ் என்பவர் இயக்கம் இந்தப்படத்தில் மம்முட்டி ஸ்ட்ரிக்ட்டான காலேஜ் புரபெஷராக நடிக்க, ஐ.பி.எஸ் அதிகாரி பவானி துர்கா வேடத்தில் வரலட்சுமி நடிக்கிறார்.. கல்லூரியில் மாணவர்களின் இரு பிரிவுகளுக்குள் ஏற்படும் மோதலை தொடர்ந்து வரலட்சுமி கல்லூரிக்குள் நுழையவேண்டிய சூழல் ஏற்படுவதாகவும் அதை தொடர்ந்து அவர் சந்திக்கும் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்கிறார் என்பதுமாக அவரது கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளதாம். 'புலி முருகன்' என்கிற சூப்பர்ஹிட் படத்திற்கு கதை எழுதிய உதயகிருஷ்ணா தான் இந்தப்படத்திற்கும் கதை எழுதுகிறார்.