ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கடந்த வருடம் மம்முட்டி நடித்த கசபா படம் மூலம் மலையாள சினிமாவில் அடியெடுத்து வைத்தார் வரலட்சுமி. ஆனால் அதன்பின் தொடர்ந்து வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்தவருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. இந்த வருடம் மீண்டும் ஒரு வாய்ப்பாக சமுத்திரக்கனியின் அப்பா மலையாள ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமான வரலட்சுமி, பூஜை முடிந்த சில நாட்களிலேயே அந்தப்படத்தின் தயாரிப்பாளருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அந்தப்படத்தில் இருந்து விலகினார்.
இந்தநிலையில் இழந்த வாய்ப்பை ஈடு செய்யும் விதமாக மலையாளத்தில் இருந்து மீண்டும் மம்முட்டி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வரலட்சுமியை தேடிவந்துள்ளதாம். கடந்த 2014ல் மம்முட்டியை வைத்து ராஜாதி ராஜா என்கிற இயக்கிய அஜய் வாசுதேவ் தான் இந்த புதிய படத்தை இயக்கவுள்ளார்.. சூப்பர்ஹிட்டான புலி முருகன் படத்தின் கதாசிரியரான உதயகிருஷ்ணா தான் இந்தப்படத்திற்கு கதை எழுதுகிறார்.. வரலட்சுமிக்கு முன் அந்த கேரக்டரில் நடிக்க ராய் லட்சுமியைத்தான் ஒப்பந்தம் செய்வதாக திட்டமிட்டிருந்தார்கள்.. ஆனால் சில காரணங்களால் அந்த வாய்ப்பு இப்போது வரலட்சுமியின் கைகளுக்கு சென்றுள்ளது.