விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
மலையாள திரையுலகில் ஒரு நடிகராக மட்டும் அல்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் விளங்குபவர் நடிகர் குஞ்சாக்கோ போபன்.. அப்படிப்பட்டவர் ஏன் வசதி குறைந்த ரிசார்ட்டுகளை வாடகைக்கு விட்டு தொழில் நடத்த வேண்டிய நிலையில் இருக்கிறார் என்கிற கேள்வி எழத்தான் செய்யும்.. விரிவாக படித்தால் விஷயம் தெரிந்துவிடப்போகிறது.. தற்போது ரஞ்சித் சங்கர் டைரக்சனில் 'ராமண்டே ஈடன் தோட்டம்' என்கிற படத்தில் நடித்து வருகிறார் குஞ்சாக்கோ போபன்.. இந்தப்படம் வரும் மே-12ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது..
இந்தப்படத்தில் ரிசார்ட்டுகளை வாடகைக்கு விட்டு தொழில் செய்பவராக நடித்துள்ளார் குஞ்சாக்கோ.. ரிசார்ட் என்றாலும் மிகக்குறைந்த வசதிகள் கொண்டவைதான்.. இவற்றை வைத்து எப்படி தொழில் போட்டியை அவர் சமாளிக்கிறார் என்பதுதான் கதை... இதேபோல சில வருடங்களுக்கு முன் வெளியான 'புள்ளிப்புலிகளும் ஆட்டின் குட்டியும்' என்கிற படத்தில் கூட இதேபோல குறைந்த வசதிகொண்ட போட் ஹவுஸ்களை வடக்கு விட்டு தொழில் நடத்துபவராக குஞ்சாக்கோ நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.