ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
திலீப் நடிப்பில் அடுத்ததாக வெளிவர தயாராக இருக்கும் படம் தான் 'ஜார்ஜேட்டன்ஸ் பூரம்'.. மார்ச் இறுதியில் இந்தப்படத்தை வெளியிடும் முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.. கேள்விப்பட்ட தகவல்கள் உண்மையாக இருக்குமானால் இந்தமுறை மம்முட்டி நடித்துள்ள 'தி கிரேட் பாதர்' படத்துடன் திலீப்பின் இந்தப்படமும் ஒரே நாளில் மோத வாய்ப்பிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.. ஆனால் நாம் சொல்லப்போகும் விஷயம் அதுவல்ல..
கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை பாவனாவுக்கு நடைபெற்ற கொடுமையான நிகழ்வின் பின்னணியில் திலீப் இருப்பதாக சிலர் செய்தி பரப்பினார்கள் அல்லவா.?. நேற்றுமுன் தினம் நடைபெற்ற இந்த 'ஜார்ஜேட்டன்ஸ் பூரம்' படத்தின் இசைவெளியீட்டு விழாவில் அது பற்றி குறிப்பிட்டு தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் திலீப்..
சம்பந்தப்பட்ட நிகழ்வில் என்னை சம்பந்தப்படுத்தி ஒரு ஆங்கில பத்திரிகை தவறாக எழுதப்போக, மற்ற சில மஞ்சள் பத்திரிகைகளும் அதையே பின்பற்றி என்மீது அவதூறு பரப்பின. நான் அப்படி கீழ்த்தரமான காரியத்தை செய்யவேண்டிய அவசியம் எனக்கு இல்லவே இல்லை.. சம்பந்தப்பட்ட நடிகையுடன் அந்த சமயத்தில் நானும் கூட தொடர்பு கொண்டு ஆறுதல் அளித்தேன்.. கடவுள் சத்தியமாக எனக்கும் அந்த நிகழ்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என கண்கலங்காத குறையாக பேசியுள்ளார் திலீப்..