ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சமீபத்தில் இந்தியா-இங்கிலாந்து இடையேயான கலாசார ஆண்டு வரவேற்பு விழா லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் நடந்தது. இந்த விழாவை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் இருந்து கலைத்துறையில் சாதனைகள் புரிந்தவர் என்கிற வகையில் நடிகர் கமல் இந்த விழாவில் கலந்து கொண்டது போல, கேரளாவில் இருந்து ராஜ்யசபா எம்பி என்கிற முறையில் நடிகர் சுரேஷ்கோபியும் கலந்து கொண்டார்..
இங்கிலாந்து மகாராணியை அவர் சந்தித்தபோது சுரேஷ்கோபி அணிந்திருந்த உடை ராணியை மிகவும் கவர்ந்ததாம். அந்த உடை குறித்து தனது பாராட்டை தெரிவித்த ராணி, இந்திய அரசியலில் அவரது பணி குறித்தும் விசாரித்தாராம். மேலும் லண்டனில் உள்ள தமிழ் மற்றும் மலையாள கூட்டமைப்பினருடன் இந்த பிரிட்டன் அரசு ஏற்பாடு ஏற்பாடு செய்த விவாத கருத்தரங்கில் கமலும் சுரேஷ்கோபியும் கலந்து கொண்டு பேசினார்கள். இந்த கூட்டத்தில் கமல் உட்பட நம் நாட்டினரும், மற்றவர்களும் கோட் சூட் அணிந்திருக்க, நமது பாரம்பரிய உடையான வேட்டி-சட்டையுடன் கலந்துகொண்டு ஆச்சர்யப்படுத்தினார் சுரேஷ்கோபி.