ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மலையாளத்தில் கடந்த சில மாதங்களுக்குமுன் வெளியாகி கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்த படம் '1983'. 'நேரம்' பட ஹீரோவான நிவின்பாலி நடித்த இந்த படம் முழுவதும் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி, ஆனால் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் அமைந்திருந்தது.. '1983'ல் இந்தியா உலகக் கோப்பையை கைப்பற்றியதில் இருந்தே கிரிக்கெட் தான் உயிர் மூச்சு என்று இருக்கும் கிராமத்து இளைஞன் நிவின்பாலி, கிரிக்கெட் விளையாடும் ஆர்வத்தால் தனது படிப்பு, காதல் ஆகியவற்றை தொலைக்கிறார்.. ஆனால் ஒருகட்டத்தில் தனது ஏழு வயது மகன் கண்ணனிடமும் கிரிக்கெட் ஆர்வம் இருப்பதை அறிந்து கொள்கிறார்.
இறுதியாக தான் இழந்ததை, தன் தந்தை தனக்கு தராததை, தனது மகன் விரும்பியதை நிறைவேற்றினாரா என்பதுதான் உணர்வுப்பூர்வமான க்ளைமாக்ஸ். இந்தப்படத்தை இயக்கியுள்ள அப்ரிட் ஷைனுக்கு இது முதல் படம். இந்தப்படம் வெளியானபோதே இந்தப்படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளரும் சச்சினை சந்தித்து தங்களது '1983' படத்தின் டிவிடியை அவருக்கு வழங்கினார்கள் என்று கூட தகவல் வெளியானது.. ஆனால் அதை அவர் பார்த்தாரா இல்லையா என்கிற தகவல் எதுவும் இல்லை.
இப்போது லேட்டஸ்ட் நியூஸ் என்னவென்றால் சச்சினின் கேரள பிளாஸ்டர்ஸ் அணியின் தூதராக நிவின்பாலி இருப்பதால் சச்சினுக்கும் நிவின்பாலிக்கும் நல்ல நட்பு இருக்கிறது.. இப்போது தான் நிவின்பாலி நடித்திருந்த '1983' படத்தை பற்றி சச்சினுக்கு முழு விபரம் தெரிய வந்ததாம். அதனால் இந்தப்படத்தின் டிவிடி ஒன்றை சப் டைட்டிலுடன் தனக்கு கொடுக்கும்படி கேட்டுக்கொண்டாராம் சச்சின். மிகுந்த சந்தோசத்துடன் அதற்கான ஏற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளார் நிவின்பாலி.