ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற இளைஞர்களின் வழியைப் பின்பற்றி ஆந்திரா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக் கோரி, நாளை மறுதினம் 26ம் தேதியன்று விசாகப்பட்டிணம், ஆர்கே.பீச்சில் அறவழிப் போராட்டம் ஒன்றிற்கு ஆந்திர இளைஞர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு பவன்கல்யாண் உள்ளிட்ட பல நடிகர்கள், அமைப்புகள், அரசியல் காட்சிகள்ஆதரவு தெரிவித்துள்ளன.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்காக ஹிப்ஹாப் ஆதி ஒரு ஆல்பத்தைக் கடந்த வருடம் வெளியிட்டார். பொங்கலுக்கு முன்பு போராட்டம் ஆரம்பமானதிலிருந்து அடுத்தடுத்து பலரும் ஜல்லிக்கட்டுக்காக ஆல்பங்களை வெளியிட்டார்கள்.
இப்போது அதே பாணியில் பவன்கல்யாணும் 'தேஷ் பச்சாவ்' என்ற தலைப்பில் ஒரு இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். 'தேசத்தைக் காப்பாற்று' என்ற அந்த ஆல்பம் பவன்கல்யாண் நடித்து மணிசர்மான இசையில் வெளிவந்த 'குடும்பா சங்கர்' படத்தில் இடம் பெற்ற 'லே லே லே...' என்ற பாடலின் ரீ-மிக்சாக உருவாக்கப்பட்டுள்ளது. சற்று முன் இந்தப் பாடலை யு டியுபில் வெளியிட்டுள்ளார் பவன்கல்யாண்.
பிப்ரவரி மாதம் 5ம் தேதிதான் இந்தப் பாடலை வெளியிடுவதாக இருந்தாராம். ஆனால், போராட்டத்தை முன்னிட்டு அதை முன்கூட்டியே இன்றே வெளியிடுவதாக பவன்கல்யாண் குறிப்பிட்டுள்ளார்.