ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழ்சினிமாவில் அஜித் தனது படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து கொடுப்பது ஊரறிந்த விஷயம்.. அதேபோல மலையாள சினிமாவில் மம்முட்டியும் தனது படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து கொடுப்பதை தவறாமல் கடைபிடித்து வருகிறார். சமீபத்தில் ரஞ்சித் டைரக்சனில் மம்முட்டி நடித்துவரும் 'புத்தன் பணம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக கோழிக்கோட்டில் உள்ள மகாராணி ஹோட்டலில் படக்குழுனர் சுமார் 150 பேருக்கு பிரியாணி பார்ட்டி வைத்து அசத்தினார்.. இது மம்முட்டி கொடுக்கும் நூறாவது பிரியாணி விருந்து என்பது குறிப்பிடத்தக்கது..
இப்படி பிரியாணி விருந்து கொடுக்க மம்முட்டி தயரானதே சுவாரஸ்யமான விஷயம் தான்.. கடந்த இருபது வருடங்களுக்கு முன் மம்முட்டி மோகன்லால் இருவரும் 'ஹரிகிருஷ்ணன்ஸ்' என்கிற படத்தில் இணைந்து நடித்தனர். இந்தப்படத்தின் ஷூட்டிங்கில் மம்முட்டிக்கு வீட்டில் இருந்து தலைவாழை இழையுடன் சாப்பாடு அனுப்பிவைத்தாராம் மம்முட்டியின் மனைவி.. ஆனால் அந்த சாப்பாட்டை மோகன்லால் எடுத்து சாப்பிட்டு விட்டாராம். இதனால் அடுத்தநாள் ஐந்து பேருக்குண்டான சாப்பாடு மம்முட்டியின் வீட்டில் இருந்து வந்ததாம். அதற்கடுத்த நாட்களில் மம்முட்டியின் வீட்டு ஸ்பெஷல் சாப்பாடு சாப்பிட ஆட்களின் எண்ணிக்கை அதிகரித்ததாம். இதனால் ஷாக்கான மம்முட்டி, அப்போதிருந்து தனது படக்குழுவினருக்கு படம் முடிவதற்குள் ஒருநாள் தனியாக பிரியாணி விருந்தே கொடுக்க ஆரம்பித்தாராம். இதோ இப்போது அந்த பிரியாணி விருந்துதான் செஞ்சுரி அடித்திருக்கிறது.