ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மலையாள சினிமாவின் ஜனப்ரிய நாயகன் திலீப் சினிமாவிற்கு ஒதுக்கிய நேரம் போக, தனது மீதி நேரம் மற்றும் பணம் என இரண்டையும் சமூக நோக்கிலான நல்ல காரியங்களுக்கு ஒதுக்கி உதவி வருகிறார்.. இதற்காகவே தந்தையின் பெயரில் சிபி பவுண்டேஷன் என்கிற அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.. இந்த புது வருடத்தில் முதல் நடவடிக்கையாக, அதிக செலவிலான கண்பார்வை சிகிச்சை தேவைப்படும் நிலையில் உள்ள 100 பேருக்கு 50 லட்சம் செலவில் கண் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளார் திலீப்.. இந்த சிகிச்சையை திலீப்பிற்கு சொந்தமான கண் மருத்துவமனையே இலவசமாக அளிக்க இருக்கிறது.
இதற்கான அறிவிப்பு விழா நேற்று சாலக்குடியில் உள்ள லயன்ஸ் கிளப்பில் நடைபெற்றது.. இந்த விழாவில் பேசிய திலீப் நெகிழ்ச்சியுடன் தனது வாழ்வில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை குறிப்பிட்டார்.. “நான் சினிமாவுக்கு வருவதற்குமுன் ஒருநாள் எனது அம்மா சமையற்கட்டில் வேலை செய்துகொண்டிருந்தபோது அவரது கண்களில் தூசு விழுந்தது.. சின்ன விஷயம் தானே சரியாகிவிடும் என நினைத்தால், அது பெரிதாக மாறி, அவருக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தி, இறுதியாக ஒரு கண்ணின் பார்வையையையும் பறித்துக்கொண்டது. பின் நான் சினிமாவிற்கு வந்து பணம் வந்ததும் என் தாய்க்கு கண் சிகிச்சை அளித்து அவரது பார்வையை மீட்டேன்.. ஆனால் அந்த நாட்களில் அவர் பட்ட வேதனை என்னை நீண்ட நாட்களாகவே உறுத்தி வந்தது.. அதனால் இப்போதும் கூட பார்வையற்ற யாரை பார்த்தாலும் எனது தாய்தான் ஞாபகத்துக்கு வருவார். எனவே தான் கண் பார்வை இழந்தவர்களுக்காக இந்த இலவச சிக்கிச்சை அளிக்கும் நடவடிக்கையை துவங்கியுள்ளேன்” என கண் கலங்க பேசினார் திலீப்.