ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
வைசாக் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‛புலி முருகன்'. மலையாளத்தில் வெளியாகி சக்கபோடு போட்டிருக்கும் இப்படம் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. தொடர்ந்து 100 தியேட்டர்களில் 50வது நாளை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் திரையுலகினருக்கு பெரும் தலைவலியாக இருக்கும் திருட்டு விசிடி பிரச்னை இப்போது இணையதளங்கள் வாயிலாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. படம் வெளியாகும் அன்றே திருட்டுத்தனமாக இணையதளங்களில் சிலர் பதிவேற்றிவிடுகின்றனர். இது திரைத்துறையினரை கவலை அடைய செய்துள்ளது.
இதனிடையே புலி முருகன் படத்தை ‛தமிழ் ராக்கர்ஸ்' என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது தொடர்பாக அந்த இணையதளத்தை சேர்ந்த சதீஷ், புவனேஷ் மற்றும் ஸ்ரீனி என்ற மூவரை கோவை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.