பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் |
கருப்பு பணத்தை வெளிக்கொண்டுவர பிரதமர் எடுத்த நடவடிக்கை ஒரு கசப்பு மருந்து என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.. இதற்கு ஆதரவு, எதிர்ப்பு என இருவிதமான குரல்கல்களும் எழுந்துள்ளன.. இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட திரையுலகத்தினர் கூட பெரும்பாலும் பிரதமரின் நடவடிக்கையை பாராட்டியே வருகின்றனர்.. இப்போது லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் என்பதுபோல பிரதமரின் இந்த நடவடிக்கைக்கு தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளார் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால். இதுகுறித்து தனது வலைதளத்தில் அவர் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
“பிரதமரின் நடவடிக்கை கருப்பு பணத்தின் மீதான 'சர்ஜிகல் ஸ்ட்ரைக்' என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனால் வங்கியிலும், ஏ.டி.எம்மிலும் க்யூவில் நிற்கும் அளவுக்கு சாதாரண பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் தான்.. ஆனால் எத்தனை நாளைக்கு..? க்யூவில் நிற்பது பற்றி உனக்கென்ன தெரியும் என சிலர் கேட்கலாம். எனக்கென அத்தியாவசிய தேவை வரும்போது, கேரளாவில், வெளி மாநிலங்களில், வெளிநாடுகளில் நானும் க்யூவில் நின்றுதான் எனக்கானதை பெற்றிருக்கிறேன். இன்று நடந்துகொண்டு இருக்கும் எனது படப்பிடிப்பும் கூட இந்த நடவடிக்கையால் சிரமத்துக்கு உள்ளாகித்தான் இருக்கிறது. அதற்காக நாட்டில் மிகப்பெரிய மாற்றம் ஒன்றை கொண்டுவரும்போது இது போன்ற நடவடிக்கைகளுக்கு நாம் பக்கபலமாக இருக்கவேண்டுமே தவிர அதை நிந்திக்க கூடாது.. பிரதமரின் இந்த நடவடிக்கையை நான் பெரிதும் வரவேற்கிறேன்” என மோகன்லால் அந்த கடித்ததில் குறிப்பிட்டுள்ளார்