ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் |
காய்த்த மரம் தான் கல்லடி படும் என்பதுபோல, மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி கேரளாவையே ஜுரம் பிடிக்க வைத்த மாதிரி, சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டு இருக்கிறது 'புலி முருகன்' படம்.. இன்னும் பல இடங்களில் ஹவுஸ்புல் காட்சிகள் தொடர்வதால் அதை சமாளிப்பதற்காக சில தியேட்டர்களில் சிறப்பு காட்சிகளை திரையிட்டு வருகிறார்கள்.. ரசிகர்களுக்கு சந்தோசம் தான்.. ஆனால் ஒரு சிலருக்குத்தான் இது பொறுக்காதே.. கோலம் பகுதியை சேர்ந்த ஒருவர் உடனே மனித உரிமை கழகத்திற்கு புகாரை தட்டிவிட்டார்.
அதில் தொடர்ந்து விதிமுறைகளை மீறி அதிக காட்சிகளை திரையிட்டு வருவதாகவும், இதற்காக வழக்கமான காட்சி நேரங்களை மாற்றி அமைத்து ரசிகர்களுக்கு சிரமம் தருவதாகவும். மேலும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதகாவும் அந்த புகாரில் குறிப்பிட்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டிருந்தார். உடனே ஜெட் வேகத்தில் செயல்பட்ட மனித உரிமை கழகம் இந்த புகாரை அப்படியே கேரள அரசுக்கு அனுப்பி வைத்து இந்த புகார் குறித்து விசாரிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. கேரளா அரசு இது குறித்து கொல்லம் முனிசிபாலிட்டி நிர்வாகத்தினர் விசாரணை நடத்தவேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது