ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சிரஞ்சீவியின் 150வது திரைப்படமான கைதி நம்பர் 150 படத்தில் இடம்பெறும் குத்தாட்ட பாடலில் சிரஞ்சீவியுடன் நடனமாட நடிகை கேத்ரின் திரைஷா முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் கடைசிநேரத்தில் கேத்ரின் நீக்கப்பட்டு, ராய் லக்ஷ்மி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த மாற்றத்திற்கு காரணம் சிரஞ்சீவியின் மகள் சுஷ்மிதா தான் என கூறப்படுகின்றது. கைதி நம்பர் 150 படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றும் சுஷ்மிதா குத்தாட்ட பாடலுக்கு வடிவமைத்த உடை தொடர்பாக, கேத்ரின் திரைஷாவிற்கும், சுஷ்மிதாவிற்கும் மனகசப்பு எழுந்துள்ளது. இதனால் சுஷ்மிதாவின் வற்புறுத்தலின் பேரில் கேத்ரின் இப்படத்திலிருந்து நீக்கப்பட்டு, ராய் லக்ஷ்மி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அல்லு அர்ஜூனின் நெருங்கிய தோழியான கேத்ரின் திரைஷா அல்லு அர்ஜூன் தான் கைதி நம்பர் 150 படத்தின் குத்தாட்ட பாடலுக்கு பரிந்துரை செய்தாராம்.