மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
மம்முட்டி இத்தனை வயதானாலும் இளமை தோற்றத்துடன் வலம் வருவதை சினிமாவிலும் நேரிலும் அடிக்கடி காணமுடிகிறது. அதேசமயம் அவரது படங்களில் ஆக்சன் காட்சிகளை கவனித்து பார்த்தால் அவர் பெரிய அளவில் ரிஸ்க் எடுக்காமல் சண்டைக்காட்சிகளில் நடித்திருப்பது நன்றாகவே தெரியும். அதற்காக தனக்கு பதிலாக டூப் போடவும் மாட்டார். அதேசமயம் ரிஸ்க்கான சண்டைக்காட்சிகளை மாற்றி அமைக்க சொல்லிவிடுவார். ஆனால் மோகன்லால் அப்படியல்ல.
சண்டைக்காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். எந்த ரிஸ்க்கும் எடுப்பார். அவரை வைத்து சண்டைக்காட்சிகளை வடிவமைத்த ஸ்டண்ட் இயக்குனர்கள் அனைவருமே சண்டைக்காட்சிகளுக்கு ஒத்துழைக்கும் மோகன்லாலின் உடல்வாகு பற்றி புகழ்ந்தே வருகின்றனர். அந்தவகையில் தற்போது தான் நடித்துள்ள புலி முருகன் படத்திலும் ரிஸ்க்கான சண்டைக்காட்சிகளில் டூப் போடாமல் நடித்துள்ளார்..
ஆனால் இந்தப்படத்தை துவங்குவதற்கு முன்னரே இயக்குனர் வைசாக் தனது நலம் விரும்பியான மம்முட்டியிடம் இந்தப்படத்தின் கதையை கூறியுள்ளார். அதைக்கேட்ட மம்முட்டி படத்தில் ரிஸ்க்கான காட்சிகள் அதிகம் இருப்பதால் மோகன்லாலை வைத்து படமாக்கும்போது கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தினாராம். மேலும் ஒவ்வொரு முறையும் அவரின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளவும் என்று கூறினாராம். அதுமட்டுமல்ல, ரிலாக்ஸாக நடிப்பதை விட்டுவிட்டு இந்த வயதிலும் மோகன்லால் ஏன் ரிஸ்க் எடுத்து தன்னை வருத்திக்கொள்கிறார் என இயக்குனர் வைசாக்கிடமும் வருத்தப்பட்டாராம் மம்முட்டி.