ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் மனைவியும் முன்னாள் நடிகையுமான நம்ரதா, தனது மகன் கௌதம் கிருஷ்ணா, மகள் சித்தாராவுடன் நேற்று திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். சுடிதார் துப்பட்டாவால் தலையை மூடிய படி நம்ரதா கோவிலிருந்து தனது குழந்தைகளுடன் வெளியே வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியுள்ளன. பிரபலங்கள் பலரும் திருப்பதிக்கு சென்று வருவதும், தங்கள் திரைப்படங்கள் வெற்றியடைய தலைமுடியை காணிக்கையாகக் கொடுப்பதும் வாடிக்கையே.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது மனைவி லதா ரஜினிகாந்தின் உடல் நலம் குணமடைய வேண்டி தனது தலைமுடியை திருப்பதி பெருமாளுக்கு காணிக்கையாகக் கொடுத்தார். தற்போது டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் மனைவி தனது தலைமுடியை காணிக்கையாக கொடுத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
ஆனால் வட இந்திய பெண்ணான நம்ரதா அம்முறைப்படி, தலையில் துப்பட்டா அணிந்திருந்தாரா? அல்லது உண்மையில் கேசம் இல்லாத தலையை மறைக்க துப்பட்டா அணிந்திருந்தாரா? என்று ஒரு புறம் விவாதங்கள் நடந்து கொண்டிருக்க, நம்ரதாவிற்கு அப்படி என்ன வேண்டுதல்? எனும் கேள்விக்கு பதில் தேடும் முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.