விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
தேசிய விருது வென்ற கஞ்சே திரைப்படத்தின் நாயகன் வருண் தேஜிற்கு, கஞ்சே திரைப்படம் திரை உலக வாழ்க்கையில் நல்ல திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கஞ்சே படத்திற்கு பின்னர் மிஸ்டர், பிடா போன்ற படங்களில் வருண் தேஜ் நடித்து வருகின்றார். இயக்குனர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கத்தில் மிஸ்டர் படத்தின் படப்பிடிப்புகள், சிக்மங்களூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் பிடா படத்தின் படப்பிடிப்புகளில் கலந்து கொண்ட வருண் தேஜை, இயக்குனர் விஜய்குமார் கொண்டா சந்தித்து காதல் கதையம்சம் கொண்ட கதை ஒன்றை கூறியுள்ளார். வருண் தேஜிற்கு விஜய்குமார் கூறிய கதை பிடித்துப்போனதால் அப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாராம். மிஸ்டர், பிடா படங்களை முடித்த பின்னர் விஜய்குமார் படத்தை துவங்க வருண் திட்டமிட்டுள்ளாராம். தற்போது இப்படத்திற்கான தயாரிப்பாளரை தேடும் பணியில் தற்போது இயக்குனர் விஜய் குமார் இறங்கியுள்ளார்.