ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பிரபல மலையாள இயக்குனர் கமல் பாலிவுட் நடிகை வித்யாபாலனை வைத்து இயக்கி வரும் படம் தான் 'கமலா சுரையா'. மலையாள சினிமாவுக்கு வரமாட்டேன் என அடம்பிடித்த வித்யாபாலனையே நடிக்க ஒப்புக்கொள்ள வைத்த இந்த கமலா சுரையா யார் என்ற கேள்வி உங்களுக்கு தோன்றலாம். கேரளாவில் பாரம்பரியமிக்க நாயர் குடும்பத்தில் கமலா தாஸ் ஆக பிறந்தவர்... மாதவிக்குட்டி என்கிற புனைப்பெயர் கொண்டவர்..
பிற்பாடு நாவல்கள், சிறுகதைகள் மூலம் திரும்பிப்பார்க்க வைத்த எழுத்தாளராக உருவெடுத்தவர். பின்னர் இஸ்லாமல் ஈர்க்கப்பட்டு தனது 67வது வயதில் இஸ்லாமிய மதத்திற்கு கமலா சுரையாவாக மாறிய பெண்மையின் சுயசரிதையைத்தான் படமாக இயக்குகிறார் கமல். ஒரு பெண் எழுத்தாளரின் சுயசரிதையில் நடிக்கப்போகிறோம் என்பதாலேயே இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் வித்யாபாலன்..
இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடைபெற்றுவருவதால் இந்தமுறை ஓணம் பண்டிகையை கொண்டாட கேரளா வந்துவிட்டார் வித்யாபாலன். அதுமட்டுமல்ல, கமலா தாஸ் எழுதிய 'மை ஸ்டோரி' என்கிற அவரது சுயசரிதையை வரிவிடாமல் வாசித்துவிட்டே படப்பிடிப்பு தளத்துக்கு சென்றுள்ளார் வித்யாபாலன்.