விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
கேரளாவில் இந்தமுறை மோகன்லால், பிருத்விராஜ் ஆகியோரின் படங்கள் ஓணம் பண்டிகை ரிலீஸ் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு விட்டன. பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள 'ஒப்பம், 'ஜீத்து ஜோசப் டைரக்சனில் பிருத்விராஜ் கூட்டணி சேர்ந்து உருவாகியுள்ள 'ஊழம்' என இந்த இரண்டு படங்களும் தான் எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருக்கின்றன. மோகன்லாலுக்கு ஒரு வருட இடைவெளிவிட்டு மலையாளத்தில் படம் வெளியாவது அவரது ரசிகர்களுக்கு டபுள் ஓணம் என்றே சொல்லலாம். இது மட்டுமல்லாமல் இன்னும் சில மலையாள படங்களும் ரிலீஸாகின்றன..
இந்த போட்டியில் விக்ரம் நடித்த இருமுகன்' படமும் சேர்ந்துகொண்டுள்ளதால் போட்டி கடுமையாக இருக்கும் என்றே தெரிகிறது. மேலும் 'இருமுகன்' படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளதும், கேரளாவை சேர்ந்த விநியோகஸ்தர் சிபு தமீன்ஸ் இந்தப்படத்தை தயாரித்திருப்பதாலும், மோகன்லால், பிருத்விராஜ் படங்களுக்கு இணையாக அதிக தியேட்டர்களில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு விஷயத்தை கவனித்தீர்களா..? மோகன்லால், பிருத்விராஜ், விக்ரம் மூவரும் நடிப்பில் அகோரப்பசி கொண்டவர்கள்.. இந்த மூவர் படங்களும் ஒரே நாளில் வெளியாவது என்பது ஆச்சர்யம் தான்.