சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! |
நடிகர்கள் அனைவரும் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்தால் மலையாள ஜனப்ரிய நாயகன் திலீப் மட்டும் ஒருபடி மேலே போய் 'டி சினிமாஸ்' என்கிற மல்டிப்ளக்ஸ் தியேட்டர் காம்ப்ளக்ஸை கட்டினார். அதில் கூட வித்தியாசமாக திருவனந்தபுரம், கொச்சி, கோட்டயம் என பெரிய நகரங்களை ஒதுக்கிவிட்டு அளவான சிறிய நகரமான சாலக்குடியில் இந்த தியேட்டர்களை அமைத்திருக்கிறார். மூன்று திரையரங்குகளை கொண்ட இந்த மல்டிபிளக்ஸ் தியேட்டர் கடந்த 2014 கிறிஸ்துமஸ் பண்டிகையில் இருந்து படங்களை திரையிட்டு வருகிறது.
நேற்று முன் தினம் இந்த தியேட்டரில் இருந்து சுமார் 6.82 லட்சம் ரூபாய் திருட்டு போயிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. கடந்த மூன்று நாட்களில் திரையிடப்பட்ட படங்களின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன் தான் அது. ஆனால் திருடியது யாராக இருக்கும் என்கிற விபரமும் கிடைத்துவிட்டது.. இந்தப்பணம் திருடுபோன பின்னர், அவங்கே பணியில் இருந்த பெங்காலி ஊழியர் ஒருவர் பணிக்கு வராததையும், சாலக்குடியில் உள்ள அவரது இருப்பிடத்திலும் இல்லாததையும் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். விரைவில் அவரை பிடிக்க நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர் கேரள போலீஸார்.