விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
கடந்த வருடம் பாலிவுட்டில் அக்சய் நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் தான் 'பேபி'. இந்திய உளவாளிகளை மையப்படுத்தி இதுநாள்வரை உருவாகியிருந்த சிறந்த படங்களில் இதுவும் ஒன்று என பலராலும் பாராட்டப்பட்டது. நீரஜ் பாண்டே இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தின் இரண்டாம் பாகமாக இதன் தொடர் பாகத்தை உருவாக்குவதற்கு முன்பாக, இதன் ப்ரீக்வல் எனப்படும் முன்கதையைத்தான் இரண்டாம் பாகமாக உருவாக்க முடிவு செய்துள்ளார்களாம்.
இதன் முதல் பாகத்தில் நடித்திருந்த ராணா டகுபதி இந்த ப்ரீக்வலில் இடம்பெறவில்லையாம். அதே சமயம் முதல்பாகத்தில் இடம் பெற்ற டாப்சி இரண்டாம் பாகத்திலும் இடம் பெறுகிறாராம். புதிய அம்சமாக இந்த இரண்டாம் பாகத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜும் மிக முக்கியமான கேரக்டரில் நடிக்க இருக்கிறார் என ஒரு தகவல் கசிந்துள்ளது. அய்யா, ஔரங்கசீப் ஆகிய படங்களை தொடர்ந்து பிருத்விராஜ் பாலிவுட்டில் நடிக்கும் மூன்றாவது படமாக இது இருக்கும். அதுமட்டுமல்ல இந்த இரண்டாம் பாகத்தை நீரஜ் பாண்டே தயாரிப்பதோடு நின்றுகொள்ள, வேறு ஒருவர் படத்தை இயக்கவுள்ளாராம்.