ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கடந்த நான்கு வருடங்களாக வெளியாகி வரும் பிருத்விராஜின் படங்களை கவனித்து பார்த்தால் அதில் பெண்களை திட்டுவது போன்றோ, அல்லது மோசமான வசனங்களால் இழிவுபடுத்துவது போன்றோ காட்சிகள் இடம்பெறவே இல்லை என்பதை கண்டுபிடிக்கலாம்... அதற்கு காரணமும் இருக்கிறது என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார் பிருத்விராஜ்.. தான் நடிகனாக மாறி, முன்னணி நாயகனாக வளர்ந்த காலகட்டத்தில் பெண்களுக்கு எதிராக பஞ்ச் வசனங்களை பேசி நடித்ததை இப்போது நினைத்தால் சங்கடமாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார் பிருத்விராஜ்.
குறிப்பாக ரப் அன்ட் டப் போலீஸ் அதிகாரியாக சில வருடங்களுக்கு முன் தான் நடித்த 'வர்க்கம்' படத்தில் பெண்களை ரொம்பவும் மட்டமான வார்த்தைகளால் திட்டுவதுபோல நடித்திருந்ததை நினைவுபடுத்தும் பிருத்விராஜ், தனது வாழ்விலும் ஒரு பெண் நுழைந்தபின்தான், நிஜத்தில் மட்டுமல்ல, தனது படங்களிலும் கூட அவர்களை மோசமாக சித்திரிக்கும் காட்சிகளில் நடிக்க கூடாது என்கிற முடிவுக்கு வந்தாராம். இதுவரையிலான மலையாள சினிமாவில் இடம்பெற்ற மிகவும் தைரியமான பெண் கதாபாத்திரமாக மோகன்லாலின் 'தேவாசுரம்' படத்தில் ரேவதி ஏற்று நடித்த 'பானுமதி' கேரக்டரை குறிப்பிட்டு தன்னை மிகவும் கவர்ந்த பெண் அவள் தான் என பெருமிதமாக கூறியுள்ளார் பிருத்விராஜ்.