ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா-ஸ்ருதிஹாசன் நடித்த படம் ஏழாம் அறிவு. இந்த படத்தில் டிஎன்ஏ சம்பந்தப்பட்ட கதையை அவர் படமாக்கியிருந்தார். சீனாவில் இருந்து இந்தியாவிற்குள் வந்து நோய் கிருமிகளை பரப்பி விடும் வில்லனை, போதி தர்மரின் வழியில் வந்தவரான சூர்யாவின் டிஎன்ஏவை தூண்டி விட்டு, வில்லனை அழிப்பதுதான் அந்த படம். அதைத் தொடர்ந்து தற்போது மகேஷ்பாபுவை நாயகனாக வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் வாஸ்கோடகாமா படமும் சயின்ஸ் சம்பந்தப்பட்ட கதையில்தான் உருவாகி வருகிறதாம்.
கதைப்படி இந்த படத்தில் மகேஷ்பாபு சயின்டிஸ்டாக நடிக்கிறாராம். அதாவது ஷங்கர் இயக்கத்தில் உருவான எந்திரன் படத்தில் சயின்டிஸ்டாக நடித்த ரஜினி ரோபோவை உருவாக்குவது போன்று, இந்த படத்தில் மகேஷ்பாபு ஒரு மனிதனை உருவாக்குகிறாராம். எதைக்கொண்டு, எப்படி அவர் அந்த மனிதனை உருவாக்குகிறார்? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பதுதான் இந்த படமாம். அந்த வகையில், இந்த படத்திற்காக சில மருத்துவத்துறையை சார்ந்த வர்களின் ஆலோசனைகளைப்பெற்று திரைக்கதையை ரெடி பண்ணியிருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ்.